புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாராகும் பெரிய பட்ஜெட் படங்களால் சினிமாவுக்கே ஆபத்து என்று பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பலகோடி ரூபாய் செலவில் தயாராகும் படங்களில் கதை, நடிப்பு என எதுவும் இருப்பதில்லை. அவற்றில் 5 பாடல்கள் இருக்கின்றன. அவற்றை நடன இயக்குநர்கள் கவனிக்கின்றனர். சில ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை ஸ்டன்ட் இயக்குநர்கள் கவனிக்கின்றனர். படத்தில் இயக்குநருக்கு என்ன வேலை? நடிகருக்கு என்ன வேலை?. மக்கள் பார்க்க விரும்பாத படங்களுக்கு பல நூறு கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர். அவற்றில் ஒன்றும் இல்லாததால் அவை தோல்வி அடைகின்றன. நல்ல கலைஞர்களை வைத்து வெறும் 50 கோடியில் இவர்கள் படம் எடுப்பதில்லை.
பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்கள்தான் திரைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணம். கதை, திரைக்கதை, நடிப்பு அனைத்தும் அவற்றில் வெற்றிடங்களாக உள்ளன. இந்த படங்கள் சினிமாத் துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஏதோவொரு காரணத்தால் அரிதான ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் ஆகின்றன. ஆனால், அந்த 3 சதவீத படங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் மீதமிருக்கும் 97 சதவீத படங்களும் தோல்வி அடைகின்றன. இவை அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.