முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் நாடகத்தில் நடித்தவர்கள் தான் சினிமாவிலும் நடித்தார்கள். அதனால் நாடகம் போன்றே தூய தமிழில் வசனம் பேசினார்கள். அப்படியான காலத்தில் யதார்த்த தமிழில் பேசிய முதல் நடிகர் டி.எஸ்.பாலையா. அவரது பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்."சே... இன்னிக்கு வெள்ளிக்கிழமை கத்திய கையால தொடப்படாதப்பா" என்று மதுரை வீரனில் எம்.ஜி.ஆரிடம் கெத்து காட்டியவர் டி.எஸ்.பாலையா. காதலிக்க நேரமில்லை படத்தில் சினிமாவின் கதையை சொல்லும் நாகேஷை விட அதை வசனமே பேசாமல் கேட்ட பாலையாவின் நடிப்பு இன்றைக்கும் பேசப்படுகிறது. மார்பு சதை குலுங்க குலுங்க தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் அடித்த தவில் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
திருவிளையாடல் படத்தில் வித்யாகர்வம் பிடித்த ஹேமநாத பாகவதராக நடித்தார். அவர் பாடும் "ஒரு நாள் போதுமா..." பாடலை பாடியவர் பாலமுரளிகிருஷ்ணா. அவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சென்று ஹேமநாத பாகவதராக நானே நடிக்கிறேன் என்றார். அதற்கு ஏ.பி.நாகராஜன் சொன்னார் "இசையில் நீங்கள் மேதைதான், ஆனால் நடிப்பில் அவர் தான் மேதை. இந்த இரண்டு மேதைகளும் சேர்ந்து தான் ஹேமநாதரை திரையில் வாழ வைக்க முடியும்" என்றார். அந்த கேரக்டரில் வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார். இதனால் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
படம் வெளியான பிறகு படத்தை பார்த்த பாலமுரளி கிருஷ்ணா உடனே ஏ.பி.நாகராஜன் வீட்டுக்கே சென்று "நாகராஜா நீ சொன்னது சரிதாம்பா. அவர் மாதிரி என்னால நடிச்சிருக்கவே முடியாது. நிஜத்துலகூட எனக்கு வித்யாகர்வம் கிடையாது. ஆனா இசைக்கு சம்பந்தமே இல்லாத பாலையா என்னமா நடிச்சிருக்காரு என்று பாராட்டி விட்டுத் திரும்பினார். பாலையா ஹேமநாத பாகவதராக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.