என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
டி.எஸ்.பாலையா தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர். அவர் இடத்தை இன்னொருவரால் பிடிக்கவே முடியாது. அவரும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த படங்கள் மிகவும் குறைவுதான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்தது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் இது.
1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி, சதிலீலாவதியில் அறிமுமான எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாயும் இதில் ஹீரோக்களாக நடித்தார்கள். வி.என்.ஜானகி, எம்.என்.நம்பியார் நடித்தர்கள். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்தது. இதில் யார் ஹீரோ, டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. அப்போது டி.எஸ்.பாலையா "ராமச்சந்திரன்தானப்பா ஹீரோ... அவன்தானே அழகாக இருக்கான்.... அழகா இருக்கான்... நான் துணை ஹீரோவாக இருக்கிறேன்" என்று கூறிவிட்டார். இந்த விட்டுக்கொடுத்தல் எம்.ஜி.ஆருக்கு பாலையை மீது நட்பை உருவாக்கியது.
இடையில் சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தார் டி.எஸ்.பாலையா. அப்போது கற்பகம் படத்தில் ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆரை கேட்டார் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். அதற்கு எம்.ஜி.ஆர் "கதையில் வரும் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா நடிப்பதாக இருந்தால் நான் நடிக்கிறேன்" என்றார். "அந்த கேரக்டருக்கு வி.எஸ்.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை புக் செய்து விட்டோம்" என்று
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். "அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்.