நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
டி.எஸ்.பாலையா தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர். அவர் இடத்தை இன்னொருவரால் பிடிக்கவே முடியாது. அவரும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த படங்கள் மிகவும் குறைவுதான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்தது. அதற்கு ஒரு சின்ன உதாரணம் இது.
1948ம் ஆண்டு வெளிவந்த படம் மோகினி, சதிலீலாவதியில் அறிமுமான எம்.ஜி.ஆரும், டி.எஸ்.பாலையாயும் இதில் ஹீரோக்களாக நடித்தார்கள். வி.என்.ஜானகி, எம்.என்.நம்பியார் நடித்தர்கள். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்தது. இதில் யார் ஹீரோ, டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. அப்போது டி.எஸ்.பாலையா "ராமச்சந்திரன்தானப்பா ஹீரோ... அவன்தானே அழகாக இருக்கான்.... அழகா இருக்கான்... நான் துணை ஹீரோவாக இருக்கிறேன்" என்று கூறிவிட்டார். இந்த விட்டுக்கொடுத்தல் எம்.ஜி.ஆருக்கு பாலையை மீது நட்பை உருவாக்கியது.
இடையில் சில காலம் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தார் டி.எஸ்.பாலையா. அப்போது கற்பகம் படத்தில் ஹீரோவாக நடிக்க எம்.ஜி.ஆரை கேட்டார் இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். அதற்கு எம்.ஜி.ஆர் "கதையில் வரும் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா நடிப்பதாக இருந்தால் நான் நடிக்கிறேன்" என்றார். "அந்த கேரக்டருக்கு வி.எஸ்.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை புக் செய்து விட்டோம்" என்று
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார். "அப்படியானால் வேறு யாரையாவது நடிக்க வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகே கற்பகம் படத்தில் ஜெமினி கணேசன் நடித்தார்.