ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரது மகன் ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷக்தி, ''தொட்டால் பூ மலரும்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். தற்போது இவர் ''தற்காப்பு'' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வைஷாலி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். சமுத்திரகனியிடம் உதவியாளராக இருந்த ரவி இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தது.
''தற்காப்பு'' படத்தின் இசையை நடிகர் ஜெயம் ரவி வெளியிட கார்த்தி பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர்கள் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவரும் பேசும்போது அப்பாக்களின் பாராட்டுக்களை எதிர்பார்க்காதீர்கள் என்று கூறினர்.
விழாவில் ஜெயம் ரவி பேசும்போது, சினிமாவில் நடிக்கும்போது நாற்பது பேர் உன்னை பார்க்கிறார்கள் என்று தயங்காதே... நாலு கோடி பேருக்காக நீ நடிக்கணும் என்ற உத்வேகத்தை கொடுத்தார் எனது அப்பா. ஆரம்பத்தில் எனக்கும் தோல்வி வந்தது, நிறைய போராடி தான் இந்த இடத்திற்கு வந்தேன். அப்பாக்களிடம் பாராட்டுக்களை எதிர்பார்க்காதீர்கள் என்று பேசினார்.
கார்த்தி பேசும்போது... பாராட்டுக்களை எதிர்பார்க்க கூடாது என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமாவில் ஜெயிக்கலாம், தோற்கலாம் அதைப்பற்றி எண்ண கூடாது, கடுமையாக உழைக்க வேண்டும் என்பார். ஆகையால் அப்பாக்களிடம் பாராட்டுக்களை எதிர்பார்க்காதீர்கள். எதையும் மனதில் ஏற்றாமல் கடினமாக உழைத்தால் வெற்றி பெறலாம். தற்காப்பு படத்தில் ஷக்தி நன்றாக ஆக்ஷன் செய்திருக்கிறார், அவருக்கு நல்ல தொடக்கமாக இந்தப்படம் இருக்கும்.
இந்த விழாவில் பி.வாசு, சமுத்திரகனி, மிஷ்கின், எஸ்.பி.ஜனநாதன், அஜய் ரத்னம், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.