தமிழ் சினிமாவில், பிரபல வில்லனாக இருந்த நடிகர், மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட, திரைமறைவில் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், டில்லியில், தமிழ் மாணவர்களுக்கு எதிராக, அவர் குரல் கொடுத்ததால், கோலிவுட்டில், செல்லம் நடிகருக்கு, பலத்த எதிர்ப்பு எழுந்தது. அது, இப்போது வரை நீடிக்கிறது. அவருக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுத்தால், போராட்டம் வெடிக்கும்... என்று, சில தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளைவு, செல்லத்திற்கு வாய்ப்பு கொடுக்க தயாரான அபிமானிகள், எதற்கு வம்பு... என்று, அவரை ஓரங்கட்டி வருகின்றனர். ஆக, மேற்படி வில்லனின் இனவெறி, இப்போது, அவரது சினிமா மார்க்கெட்டுக்கே இடையூறை ஏற்படுத்தி விட்டது.
29 நவ, 2020 - 00:00
களவாணி நடிகரின் மார்க்கெட், குடை சாய்ந்து கிடப்பதால், பிரபல இயக்குனர்களுடன் நேசம் காட்டி வரும், தன் முன்னாள், 'ஹீரோயின்'களிடம் சிபாரிசு கோரி வருகிறார். அதோடு, இப்போதைய நடிகையர், ஆதாயம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்பதால், 'அப்படி, எனக்கு, 'ஹீரோ' வாய்ப்பு வாங்கிக் கொடுத்தால், கிடைக்கும் சம்பளத்தில், 'கட்டிங்' கொடுத்து விடுகிறேன்...' என்று, 'அக்ரிமென்ட்' போட்டுள்ளார். பெரும்பாலும், 'ஹீரோயின்'கள் தான், சினிமா உலகில், தங்களுக்கு சிபாரிசு செய்ய, 'ஹீரோ'க்களுக்கு, 'பார்ட்டி' கொடுப்பர். இப்போது, களவாணி நடிகரோ, தான் அம்மணிகளிடம் சிபாரிசு கேட்பதால், அவர்களுக்கு மேல்நாட்டு சரக்கு விருந்தெல்லாம் கொடுத்து, 'தாஜா' செய்து வருகிறார்.
08 நவ, 2020 - 00:00
'ஜூனியர் தாரா' என்று, ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த அந்த நடிகை, ரியல் தாரா நடிகைக்கு, பெரிய தலைவலியை கொடுத்து வருகிறார். அதாவது, ரியல் தாராவுக்கான கதையை தயார் செய்து, அவரது சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியுடன் நிற்கும் தயாரிப்பாளர்களை அணுகி, 'பொன்னை வைக்கிற இடத்தில் ஒரு பூவை வைத்தாலும் போதும்; தாரா கொடுக்கும் அதே, 'பர்பாமென்சை' நான் கொடுக்கிறேன்...' என்று, தாராவின் பட வாய்ப்பை கைப்பற்றி வருகிறார், ஜூனியர். இதனால், தன்னிடம் பேசி சென்றவர்கள், ஆலோசித்து மறுபடியும் வருவர் என்று எதிர்பார்க்கும் தாரா, அவர்களை, இந்த ஜூனியர் தாரா இடைமறிந்து விடும் சேதியறிந்து, அதிர்ச்சியடைந்துள்ளார்.
17 அக், 2020 - 00:00
உச்ச நடிகரை விமர்சித்தவர்களுக்கு, காஞ்சனா நடிகர் தக்க பதிலடி கொடுத்து வந்ததால், மேற்படி நடிகர் துவங்கவிருக்கும் அரசியல் கட்சியில், அவரும் இடம்பெறுவார் என்று தான் கருதப்பட்டது. ஆனால், உச்ச நடிகரோ, தன்னைத் தேடி வந்து, பல நடிகர்- - நடிகைகளும் கட்சியில் பதவி கேட்டு நச்சரித்ததால், கடுப்பாகி விட்டார். அதையடுத்து, எந்த திரையுலகினருக்கும் கட்சியில் இடமில்லை... என்று, கதவை இழுத்து மூடி விட்டார்.இதனால், காஞ்சனா நடிகருக்கும் கட்சியில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவைத் தொடர்ந்து, அடுத்து அரசியலிலும் பெரிய அளவில் கோலேச்சப் போகிறேன்... என்று, பில்ட் - அப் கொடுத்து வந்த காஞ்சனா நடிகர், தற்போது, அரசியல் என்று யாராவது பேச்செடுத்தாலே, கப்சிப் ஆகி விடுகிறார். அதோடு உச்ச நடிகர் மீதும், மனதளவில் அதிருப்தியில் இருக்கிறாராம்.
11 அக், 2020 - 00:00
சினேகமான நடிகை, மகனை பெற்றெடுத்த கையோடு, மீண்டும் சினிமாவில் தெறமை காட்ட, தீவிரம் காட்டி வருகிறார். அவர் எடுத்த முயற்சியின் பலனாக, இப்போது, சுள்ளானுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால், இள வயது அம்மா வேடம் என்று சொல்லி, அம்மணியை நரைமுடி நடிகையாக்கி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, 'பெரிய வேஷம் தருவர் என்று நினைத்து வந்த என்னை, இப்போது, பெரிய வயசு நடிகையாக்கி விட்டனரே...' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
29 ஜூன், 2019 - 00:00
மெரினா நடிகர், கடைசியாக நடித்த படம், தோல்வி அடைந்து விட்டதால், மனதளவில் சோர்ந்து காணப்படுகிறார். அதேசமயம், தன், 'கெத்'தை, 'மெயின்டெய்ன்' செய்ய, எந்த படவிழாக்களுக்கு சென்றாலும், அங்கு, தன் ரசிகர் படையை வரவழைத்து, தான் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும், பலத்த கைதட்டல் கொடுக்க சொல்கிறார். நடிகர், இப்படி வெட்டி பந்தா செய்து திரிவதை, அவரது முதுகுக்குப் பின் நின்று, நண்பர்களே கிண்டல் செய்கின்றனர்.
25 ஜூன், 2019 - 00:00
பையா நடிகை, புரட்சிகர மான வேடத்தில் நடிக்கும் படத்தில், ஒரு மெகா நடிகையை கவர்ச்சி பாடல் ஒன்றில் நடனமாட வைக்கும் முயற்சி நடந்தது. இந்த சேதி, அம்மணியின் காதுகளை எட்ட, கடுப்பாகி விட்டார். 'அதெப்படி, நான் ஒருத்தி, இதே படத்தில் இருக்கும்போது, இன்னொரு நடிகையை தேடுவீர்கள்...' என்று, இயக்குனரிடம் எகிறியவர், அந்த வாய்ப்பை, 'லபக்'கிக் கொண்டார், பையா நடிகை. ஆக, புரட்சி வேடத்தில் நடிக்கும் படத்தில், அதிரடி கவர்ச்சி ஆட்டமும் போடுகிறார். ஆனால், அம்மணி இப்படி உள்விளையாட்டு விளையாடியதால், கவர்ச்சி பாடலில் ஆட்டம் போட பேச்சு வார்த்தையில் இருந்த, அங்காடி நடிகை, 'செம காண்டில்' இருக்கிறார்.
08 ஜூன், 2019 - 00:00
அரசியல் கட்சி துவங்கியுள்ள உலக நடிகர், தான் ஏற்கனவே நடித்த, ஜாதி படத்தின், இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நடிகர், தற்போது, சில சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பதால், அவரை நம்பி பணம் போட்டு படமெடுத்தால், வெளியிடும்போது, ஏகப்பட்ட சிக்கல் வரும் என்று, அந்த தயாரிப்பாளர் ஓட்டம் பிடித்து விட்டார். இதனால், 'சினிமா வாய்ப்பில்லாமல், அரசியலுக்கு வந்தேன். இப்போது, தேடி வந்த சினிமா வாய்ப்பையும், அரசியல் விரட்டியடித்து விட்டதே...' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
01 ஜூன், 2019 - 00:00
சுள்ளான் நடிகர், முதன் முதலாக அப்பா - மகனாக நடித்து வரும் படத்தில் அப்பா வேடத்திற்காக அவரை, எடை அதிகரிக்க வைக்க மல்லுக்கட்டினார் இயக்குனர். ஆனால், என்ன கொடுத்தாலும் சுள்ளானின் உடம்பு பெருக்கவே இல்லை. இதனால் நொந்து போன இயக்குனர், கடைசியில் அவருக்கு நரைமுடி மற்றும் வயதான தோற்றத்தைக் காட்டும் உடைகளை வைத்து அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.
01 ஜூன், 2019 - 00:00
விட்ட மார்க்கெட்டை பிடித்து விடவேண்டும் என்று கைவசமுள்ள படங்களில், 'டூ பீசு'க்கு மாறியுள்ளார், நடிகை. அந்த உடை அலங்காரத்தில் ஆடும் பாடல் காட்சிகளில், அம்மணி ஆடும் வெறியாட்டம், படப்பிடிப்பு தளத்தையே வேர்த்து கொட்ட வைக்கிறதாம். அதைப் பார்த்து, 'இவ்ளோ ஓவரான ஆட்டம் தேவையா----...' என்று காது கடிக்கும், இயக்குனர்களிடம், 'சில காலம் நான் அடக்கி வாசித்ததால், ரசிகர்கள் என்னை மறந்து விட்டனர். அதனால், மறுபடியும் அவர்களின் கவனத்தை, என் பக்கம் திருப்புவதற்காகவே, இந்த வழி...' என்று சொல்லி கண்ணடிக்கிறார் நடிகை.
25 மே, 2019 - 00:00
'பாய்ஸ்' நடிகருக்கு மார்க்கெட் சரிந்து கிடப்பதால், இணைய பக்கத்தில் ஏதாவது சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு, பெயரளவில் பரபரப்பு கூட்டி வருகிறார். சில சமயங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களை நடிகர் பதிவிட, அவருக்கு கொலை மிரட்டல், மர்ம அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். இதனால், அதிர்ந்து போன நடிகர், அடிக்கடி மொபைல் எண்ணை மாற்றிக் கொண்டேயிருக்கிறார்.
18 மே, 2019 - 00:00
தளபதி நடிக்கும் படங்களின் கதை, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. தற்போது நடித்து வரும் படத்தின் கதையும், சர்ச்சையில் சிக்கியிருப்பதால், இயக்குனர் மீது அதிருப்தியடைந்துள்ளார். அதோடு, 'இந்த பிரச்னையை வளரவிட வேண்டாம். கதைக்கு உரிமை கோரும் நபரை அழைத்து, அவருக்கு ஒரு தொகையை கொடுத்து, சமரசம் செய்து முடித்து விடுங்கள். அதன்பின், படப்பிடிப்பை நடத்தலாம்...' என்று, தொடர்ந்து படத்தில் நடிக்க மறுத்து, இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார். இதனால், கதைக்கு உரிமை கோரும் நபரை அழைத்து, சமரசம் செய்து வருகிறார், மேற்படி பட இயக்குனர்.