சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மகாநடி படத்திற்கு பின், விஜய், விக்ரம் மற்றும் விஷால் என்று, மெகா நடிகர்களின் படங்களில் நடித்தார், கீர்த்தி சுரேஷ். இந்த படங்களில், அவருக்கும் முக்கியத்துவம் இருப்பது போன்று தான் படமாக்கினர். ஆனால், படம் வெளியாகும்போது, அவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லையாம்.
இதனால், அதிர்ந்து போயிருக்கும் கீர்த்தி சுரேஷ், இனிமேல், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதோடு, படமாக்கும் காட்சிகளை கத்தரித்து, எக்காரணத்தை முன்னிட்டும் என்னை, டம்மி பண்ணக்கூடாது... என்று உத்தரவு போட்டே, நடிக்க முடிவு செய்திருக்கிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும், சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
— எலீசா