ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா காலத்திற்கு பிறகு நெடுந்தொடர்களின் படப்பிடிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியிடப்படுவதால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதன் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனால் நெடுந்தொடர்களின் பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எல்லா சேனல்களும் தாங்கள் ஒளிபரப்பிய முன்னணி நெடுந்தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து தங்களது புட்டேஜ் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. கடந்த 1ந் தேதி முதல் வாணி போஜன், கிருஷ்ணா நடித்த தெய்வமகள் மறு ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
அதேபோல திலீப்ராயன், விஜயலட்சுமி நடித்த நாயகி தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதேபோன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை தொடர் கடந்த 1ம் தேதி முதல் மறு ஒளிப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் ஐஷ்வர் ரகுநாதன், அன்சு ஷெட்டி நடித்திருக்கிறார்கள்.