அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
விஜய் டி.வியின் நட்சத்திர தொகுப்பாளினி பாவனா. அவ்வப்போது இசை ஆல்பங்களையும் வெளியிடுவார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் தற்போது துபாயில் நடந்து வருகிறது. இதனால் துபாயில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார் பாவனா.
இந்த நிலையில் பாவானாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வர்ணணையாளர் பொறுப்பில் இருந்து விலகி இந்தியா திரும்பி விட்டார் பாவனா.
இதுகுறித்து டுவிட்டரில், ''தனிப்பட்ட காரணங்களுக்காக கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து விலகுகிறேன். என்னுடைய பெற்றோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்'' என பாவனா தெரிவித்துள்ளார்.