‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
விஜய் டி.வியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரியும் தன் பங்கிற்கு டுவிட்டரில் நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...
இதே சேனல்ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? என்று எழுதியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பட்டியலில் முதலில் கஸ்தூரி கடைசி நேரத்தில் இடம்பெறவில்லை. அந்த கோபத்தில் நிகழ்ச்சியை கலாய்த்து வருவதாக நெட்டிசன்கள் கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள்.