கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |
கலர்ஸ் தமிழ் சேனல், தனது பிறமொழி சேனலில் நல்ல வரவேற்பு பெற்ற தொடர்களை தமிழில் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் வருகிறது சந்தியா என்கிற தொடர். இது ஒரு பேண்டசி த்ரில்லர் தொடர். வருகிற ஜூலை 1ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சந்தியா என்கிற பெண்ணை சுற்றி நடக்கிற கதை. சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம். சந்தியாவுக்கு அந்த சிவனின் அருள் கிடைக்கிறது. அதில் அவள் வருங்கால கணவனை காண்கிறாள். இதனால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். காரணம் அவள் தற்போது வேறொருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். இதற்கு காரணம் ஒரு தீய சக்தி. அது ஏன் சந்தியாவின் வாழ்க்கைக்குள் வரவேண்டும். வந்து என்ன செய்கிறது என்பதுதான் சந்தியாவின் கதை.