32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி, சேனல்கள் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன. விஜய் தொலைக்காட்சி ஏற்கெனவே செக்கச் சிவந்த வானம், பரியேறும் பெருமாள், வடசென்னை, சாமி 2 ஆகிய 4 படங்களை ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. தற்போது பொங்கலுக்கு முதல் நாள் அதாவது வருகிற 14ந் தேதி மாலை 4 மணிக்கு நடிகையர் திலகம் படத்தை ஒளிபரப்ப இருப்பதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்திருக்கிறது.
இந்தப் படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியானது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும், என்.டி.ராமராவாக ஜூனியர் என்டிஆரும், ரங்காராவாக மோகன் பாபுவும் நடித்திருக்கிறார்கள். நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். கடந்த மே மாதம் வெளியான படம் தற்போது டிவியில் ஒளிபரப்பாகிறது.