'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே சின்னத்திரைக்கு வந்தவர் குஷ்பு. 4 ஆண்டுகளாக அவர் நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகளும் பிரபலம். அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மருமகள், குங்குமம், கல்கி, நம்ம குடும்பம், ருத்ரா உள்பட பல தொடர்களில் நடித்தார்.
நந்தினி, மாயா என்ற பிரமாண்ட தொடர்களை தயாரித்தார். அரசியல் பணிகள் காரணமாக சீரியலில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் தயாரித்த நந்தினி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இப்போது மீண்டும் சீரியலில் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். அவரே தயாரிக்கும், லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் அவர் தான் கதையின் நாயகி. மகாலட்சுமி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினைகள் தான் கதை. இதில் குஷ்புவுடன் சுரேஷ், டெல்லி கணேஷ், சுதாசந்திரன், நட்சத்திரா, தனிஷா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தேவிபாலா கதை, திரைக்கதை எழுதுகிறார், ஜவஹர் இயக்குகிறார்.
இதுகுறித்து குஷ்பு கூறியதாவது: நந்தினி தொடரில் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் காட்சியில் தான் நடித்தேன். 20 நாட்கள் அதில் முகம் காட்டினேன். ஏதாவது ஒரு வகையில் முக்கியத்துவம் இல்லாவிட்டால் அங்கே எனக்கு வேலை இருக்காது. அந்தக் கதையில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததால் தொடர்ந்து நடிக்கவில்லை. 'லட்சுமி ஸ்டோர்ஸ்' தொடரில் நான் தான் மையம். என்னை சுற்றித்தான் கதை நகரும். நல்ல கதாபாத்திரம் என்பதால் நடிக்கிறேன் என்றார்.