அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறவர் அஸ்வதி பாபு. இவர் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அஸ்வதி பாபு, தனது வீட்டில் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து திற்கரை போலீசார் அஸ்வதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து எம்டிஎம்ஏ என்கிற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அஸ்மிதாவும், அவரது டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூர், மும்பையில் இருந்து போதை பொருளை கடத்தி வந்தது, அதை கேரளாவில் நடக்கும் ரகசிய பார்ட்டிகளுக்கு சப்ளை செய்து வந்திருப்பதாகவும், சினிமாவில் உள்ள பலருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. அஸ்மிதாவிடம் விசாரணை நடத்தினால் மேலும் பலர் சிக்கவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கள்ள நோட்டு அச்சடித்தாக சமீபத்தில் ஒரு மலையாள டிவி நடிகை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.