‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பானு. அதன் பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தேசிங்கு ராஜா, பொன்னர் சங்கர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். 20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்திரகுமாரி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார், தயாரித்து நடித்து வந்த வாணி ராணி தொடர் 1700 எபிசோட்களுடன் இன்று முடிவடைகிறது. இதையொட்டி அவர் தயாரித்து 7 வேடங்களில் நடிக்கும் சந்திரகுமாரி தொடர் நாளை மறுநாள் (10ந் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது.
இது பிரமாண்ட சரித்திர தொடர் ஆகும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் தாமிரபரணி பானு, ராதிகாவின் மகளாகவும், இளவரசியாகவும் நடிக்கிறார். இவர்களுடன் நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு, தற்போது தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.