தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பானு. அதன் பிறகு ரசிகர் மன்றம், அழகர் மலை, சட்டப்படி குற்றம், புதுமுகங்கள் தேவை, மூன்று பேர் மூன்று காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தேசிங்கு ராஜா, பொன்னர் சங்கர் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். 20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது சந்திரகுமாரி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
ராதிகா சரத்குமார், தயாரித்து நடித்து வந்த வாணி ராணி தொடர் 1700 எபிசோட்களுடன் இன்று முடிவடைகிறது. இதையொட்டி அவர் தயாரித்து 7 வேடங்களில் நடிக்கும் சந்திரகுமாரி தொடர் நாளை மறுநாள் (10ந் தேதி) முதல் ஒளிபரப்பாகிறது.
இது பிரமாண்ட சரித்திர தொடர் ஆகும். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது. இதில் தாமிரபரணி பானு, ராதிகாவின் மகளாகவும், இளவரசியாகவும் நடிக்கிறார். இவர்களுடன் நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்த பானு, தற்போது தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.