இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ரீனா அகர்வால். கியா மஸ்த் ஹய் லைப், ஏஜண்ட் ராகவ் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். கியா ஹால் மாஸ்டர் பாஞ்சால் என்ற தொடரில் நடித்து வந்தார். இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பிற்குள் புகுந்த நாய், இவரை கடித்து விட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது ரீனா அகர்வால், தொடரின் தயாரிப்பாளர் நாய் கடித்ததற்கான நஷ்ட ஈடும் தரவில்லை, சிகிச்சை செலவையும் ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சம்பவத்திற்கு இதுவரை தயாரிப்பாளர் நஷ்ட ஈடு தரவில்லை. 4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். நிறைய பணம் செலவானது. அந்த செலவையும் தரவில்லை. அந்த சம்பவத்தால் தொடரில் நடிக்க முடியாமல் வெளியேறி விட்டேன். இதனால் வருமானத்தையும் இழந்து விட்டேன். இப்போது ஒரு லட்சம் தருவதாக சொல்கிறார்கள். இந்தப் பணம் எனது இழப்பை எந்த விதத்திலும் ஈடுகட்டாது. இது குறித்து வழக்கு தொடரலாமா என்றும் யோசித்து வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.