'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஸ்டார் பிளஸ் டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட பேண்டசி சீரியல் நஸார். இதில் பிரபல பாலிவுட் நடிகை அந்தரா பிஸ்வாஸ், ரித்து சவுத்ரி, நியாதி பட்டாணி, ஹரிஷ் ராஜ்புத், சமிதா பன்சாலி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுவரை 38 எபிசோட்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
தற்போது இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் அதே கண்கள் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. வருகிற 8ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
200 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தீய சக்தியான மோகினி, தன்னை இளமையாக வைத்துக் கொள்ள மனிதர்களை கொன்று ரத்தம் குடிக்கிறாள். தன் காம இச்சைக்காக மிருதுள் என்பவரை திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு அனஸ், காஜல் என இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. மோகினிக்குள் இருக்கும் தீய சக்தி மீண்டும் எழுதுகிறது. கணவனை கொலை செய்து ரத்தம் குடிக்கிறாள்.
அவள் தன் குழந்தைகளையும் கொல்ல நினைக்கிறாள். இதனை திவ்யா என்பவர் கண்டுபிடித்து குழந்தைகளை காப்பாற்றி வளர்கிறாள். குழந்தைகளில் ஒருவரான அனஸ் இளைஞன் ஆனதும் அசாதாரண சக்கி கிடைக்கிறது. தன் மகனை காண மோகினி மீண்டும் வருகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.