மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல தொகுப்பாளினியான அஞ்சனா, நடிகர் கயல் சந்திரனின் மனைவி ஆவார். இவர் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை. அதனால் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விஜய்யின் சர்கார் படத்தை இவர்தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினார்கள்.
அதையடுத்து சர்கார் விழாவை அஞ்சனா தொகுத்து வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் அவரது இணைய பக்கத்திற்குள் சென்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அஞ்சனா ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், விஜய் பட விழாவை தொகுத்து வழங்குவதை மிஸ் பண்ணி விட்டேன். என் குழந்தையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக உள்ளது. என் மீது நீங்கள் வைத்துள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ள அஞ்சனா, என் தோழி தியா நன்றாகவே தொகுத்து வழங்கியிருந்தார். கலக்குமா நீ -என்று பதிவிட்டுள்ளார்.