ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்மகள் வந்தாள் தொடரில் ரோகினி கேரக்டரில் நடித்து வந்த ஆயிஷா, தற்போது தொடரில் இருந்து விலகி விட்டார். கணவனுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஆயிஷாவை வற்புறுத்தியதால் அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பதிலாக தற்போது அதே கேரக்டரில் மேக்னா வின்செண்ட் நடிக்கிறார். மேக்னாவை ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். தெய்வம் தந்த வீடு தொடரில் சீதா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்.
தெய்வம் தந்த வீடு சீரியலுக்கு பிறகு மலையாள சீரியல்களில் நடித்த மேக்னா, அதன்பிறகு திருணம் செய்து கொண்டு செட்டிலானார். இப்போது பொன்மகள் வந்தாள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான மேக்னா, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார்.