மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்தவர் லதாராவ். தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கையை தொடங்கி சீரியல் நடிகை ஆனவர். திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரையிலிருந்து முழுமையாக விலகினார். சமீபத்தில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்கப்போவதாக லதாராவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி 4 மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, வெள்ளித்திரையில் முயற்சிகளை தொடர்ந்தேன். முதலில் வடிவேலுக்கு ஜோடியாக தில்லாலங்கடி என்ற படத்தில் காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.
அதைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி போன்று பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான கடிகார மனிதர்கள் என்ற படத்தில் கதையின் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பரத்தின் 8, விவேக் - தேவயானியின் எழுமின் படங்களிலும் நடித்துள்ளேன். தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பேன் என்கிறார் லதாராவ்.