அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். கோபிநாத்துக்கு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் சில சினிமாவிலும் அவர் நடித்தார்.
கோபிநாத் இதுவரை நீயா நானா நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கினார். இதுதவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறார். பொது விழாக்களில் பேச்சாளராக கலந்து கொண்டிருக்கிறார். தற்போது நீயா நானா தவிர மற்றொரு புதிய நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியின் பெயர் டிவைடெட்.
இந்த நிகழ்ச்சியில் முன்பின் அறிமுகமில்லாத 3 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு பொது அறிவு தொடர்பான 15 கேள்விகள் கொடுக்கப்படும் அதற்கான பதிலை 3 பேரும் ஒரே மாதிரியாக சொல்ல வேண்டும். இறுதியில் மூவருக்குமே 50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். அந்த பரிசை அவர்கள் சண்டைபோடாமல் பங்கிட்டு கொள்ள வேண்டும். அவர்களுக்குள் மோதல் வந்தாலோ, மூவரில் ஒருவர் சரியான பதிலை சொல்லாவிட்டாலோ அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் ஆவார்கள்.
விட்டுக்கொடுத்தல், ஒருங்கிணைந்து செயல்படுதல் இதுதான் நிகழ்ச்சின் மைய புள்ளி. விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.