ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வந்தவர் நிஷா. இவரது கணவர் சக்தி முருகன். இவர்கள், சென்னையில் ஸ்கை எக்யூப்மென்ட் என்ற பெயரில் மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர்.
சென்னை, கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் நிறுவனத்தில் ரூ.37 லட்சத்திற்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியுள்ளனர். இதற்காக அனிஷா செக் கொடுத்திருக்கிறார். ஆனால் வங்கியில் பணம் இல்லை என்று சொல்லி அந்த செக் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து நிஷாவிடம் பணத்தை கேட்டபோது தர மறுத்தாகவும், பிரசாந்த்தை அனிஷா, அவரது கணவர் சக்தி முருகன் உள்ளிட்டோர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரசாந்த் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷாவை கைது செய்துள்ளனர். சக்தி முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அனிஷா - சக்தி முருகன் மீது டிராவல்ஸ் நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக புகார் உள்ளதாக கூறப்படுகிறது.