மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர், நடிகைகள் தற்கொலை சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது டிவி சீரியல்களில் நடித்து வந்த ப்ரியங்கா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் தயாரித்த வம்சம் சீரியலில் நடித்து பிரபலமானவர் ப்ரியங்கா. சில சீரியல்களில் நடித்து வந்த இவர், சென்னை, வளசரவாக்கம், காமக்கோடி நகரில் வசித்து வந்தார். இவருக்கும் கூடைப்பந்து பயிற்சியாளருமான அருண்பாலா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில், இதை காரணம் காட்டி அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இதனால் சில மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை ப்ரியங்காவின் அறைக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து வீட்டு வேலைக்கார பெண் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது ப்ரியங்கா, தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்னை காரணமாக ப்ரியங்கா தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.