வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல மலையாள சின்னத்திரை சீரியல் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவரது தொடரில் நடித்து வரும் நிஷா சாரங் பாலியல் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கேரள மகளிர் ஆணையம் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் மீது மற்றொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிதது வருகிறவர் ரச்சனா. அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு உன்னி கிருஷ்ணன் இயக்கிய தொடரில் நடித்தேன். அவர் என்னை தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் என்னை துன்புறுத்தினார். அவமானப்படுத்தினார், தகாத வார்த்தைகளால் பேசினார். அவர் மிகவும் திமிர்பிடித்தவர். சீரியலில் நடிக்கும் பெண்களை அடிமையாக நினைக்கிறவர். சினிமா வாய்ப்பு கிடைத்ததும் சீரியில் இருந்து விலகிக் கொண்டேன். நான் சினிமா நடிகை ஆனதுகூட அவருக்கு பிடிக்கவில்லை, சினிமா வாய்ப்பு கிடைத்த மறுநாளே என்னை சீரியலில் இருந்து விலக்கி விட்டார்.
இப்போது அவர் நிஷாவுக்கும் தொல்லை கொடுத்திருப்பதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். நிஷாவுக்கு நீதி கிடைக்க அவருக்கு துணையாக இருப்பேன். மலையாள திரையுலகமும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு ரச்சனா கூறியுள்ளார்.