ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் தலைமையில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனார். இதனால் நேற்று நடந்த படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் வெளிமாநில தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவது பெப்சி விதிகளுக்கு முரணானது. அதிக அளவில் பெப்சி தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்போது பணிபுரிந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப பெறுவோம்" என்றார்.