ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இதற்கான அமைக்கப்பட்ட பிரமாண்ட வீட்டில் 60 கேமராக்கள் கொண்டு இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் வெளி மாநிலம், மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெப்சி தொழிலாளர்கள் சுமார் 25 பேர் பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் தலைமையில் பிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்டனர். வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு பணியாற்றக்கூடாது பெப்சி தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனார். இதனால் நேற்று நடந்த படப்பிடிப்பு சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் பெப்சி தொழிலாளர்கள் நிகழ்ச்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பெப்சி நிர்வாகி அங்கமுத்து சண்முகம் கூறும்போது, "தமிழ்நாட்டில் நடக்கும் படப்பிடிப்பில் வெளிமாநில தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்துவது பெப்சி விதிகளுக்கு முரணானது. அதிக அளவில் பெப்சி தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும். கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து கமல்ஹாசனிடம் தெரிவிப்போம். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தற்போது பணிபுரிந்து வரும் பெப்சி தொழிலாளர்கள் அனைவரையும் திரும்ப பெறுவோம்" என்றார்.