ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து, அதன் பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் குட்டி பத்மினி. இப்போது சின்னத்திரையில் கதாசிரியர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகத்துடன் பவனி வருகிறார்.
சின்னத்திரை தயாரிப்பார்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கில்டு ஆகிய அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதோடு சமீபகாலமாக தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார்.
3 வயதில் நடிக்க வந்த குட்டி பத்மினி எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை வரை இணைந்து பணியாற்றி இருக்கிறார். தனது சுயசரிதையில் எதையும் மறைக்காமல் எழுதி வருகிறாராம். யாரையும் மறைமுகமாக குறிப்பிடாமல் நேரிடியாக பெயர் குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். இந்த சுயசரிதை எப்போது வெளியே வரும் என தெரியவில்லை.