ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா துறையில் கால்பதித்த லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா, எங்க மாமா என்ற தெலுங்கு படத்தில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படையப்பா, வில்லன், தெனாலி உள்பட பல படங்களிலும் நடித்தார். ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்த லாவண்யா. சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். சின்னத்திரைக்கு வந்த லாவண்யா இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சீரியல் ரோமாபுரி பாண்டியன்.
தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார். சீரியல்களால் பல சினிமா வாய்ப்புகள் தவறியதால் இந்த முடிவாம். தற்போது ஆறாம் திணை என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் லாவண்யா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆறாம் திணை படம் அதற்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறார். லாவண்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.