இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
சினிமா துறையில் கால்பதித்த லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா, எங்க மாமா என்ற தெலுங்கு படத்தில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படையப்பா, வில்லன், தெனாலி உள்பட பல படங்களிலும் நடித்தார். ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்த லாவண்யா. சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். சின்னத்திரைக்கு வந்த லாவண்யா இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சீரியல் ரோமாபுரி பாண்டியன்.
தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார். சீரியல்களால் பல சினிமா வாய்ப்புகள் தவறியதால் இந்த முடிவாம். தற்போது ஆறாம் திணை என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் லாவண்யா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆறாம் திணை படம் அதற்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறார். லாவண்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.