'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னட சீரியலிலிருந்து தமிழுக்கு வந்தவர் கவிதா கவுடா. ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்தவர் நீலி தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமானார். அந்த தொடரில் அவர் வில்லியாக இருந்தாலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது. சிறந்த வில்லிக்கான விஜய் டி.வி விருதும் பெற்றார். நீலி தொடர் முடிந்ததும், தொடர்ந்து அவருக்கு வில்லி வாய்ப்புகளே வர அதை மறுத்து விட்டார். வில்லி நடிகை என்று பெயர் எடுக்க விரும்பாமல் மீண்டும் கன்னடத்திற்கே திரும்பிச் சென்று விட்டார்.
தற்போதும் ஒரே நேரத்தில் 3 சீரியல்களில் நடிக்கிறார். இப்போது இரண்டு கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகள் கவிதாவுக்கு பேசத் தெரியும், அதோடு பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் இரண்டையும் முறைப்படி கற்றவர். இத்தனை திறமை இருந்தும் ஏன் வில்லியாகவே நடிக்க வேண்டும் என்று கிளம்பிப் போனவர் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஒரு வேளை அவர் தமிழ் படங்களின் ஹீரோயினாகவும் நடிக்ககூடும்.