ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மே 26 அன்று மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, துாத்துக்குடி சம்பவம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்று இருந்த டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர உள்ளதாக விஜய் டி.வி., நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த விஜய் அவார்ட்ஸ் என்ற விருது விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தமிழ்த்திரைப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி வாங்காமல் இருந்ததால், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம்.
அதன்பிறகு தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க முன் வந்தது விஜய் டிவி. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறாமலே இருந்தது.
இந்நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 10-வது வருடமாக இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் விருது பெறும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில், துாத்துக்குடி சம்பவம் காரணமாக, விஜய் அவார்ட்ஸ் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.