'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சீரியல் தயாரிப்பிலும், ஒளிபரப்பிலும் மற்ற தொலைக்காட்சிகளை ஒப்பிடும்போது ராஜ் டி.வி பின்தங்கியே இருந்தது. ஆனால் இப்போது ராஜ் டி.வி புதிய தொடர்களை ஒளிப்புவதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.வருகிற 28ந் தேதி முதல் 5 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. இந்த தொடர்கள் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.
இரவு 7 மணிக்கு கடல் கடந்து உத்யோகம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. பெற்றவர்களை இங்கு தவிக்க விட்டவிட்டு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை பற்றிய தொடர். 7.30 மணிக்கு கங்காதரனை காணோம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு ஆணை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் இது. அடுத்து 8 மணிக்கு கண்ணம்மா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
இது வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை. 8.30 மணிக்கு ஹலோ சியாமளா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு இளம்பெண் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய தொடர். 9 மணிக்கு நலம் நலமறிய ஆவல் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. குடும்பங்களில் நடக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை கொண்ட தொடர்.