பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஜீ தமிழ் சேனலில் சரிகமப என்ற பெயரில் பிரமாண்ட இசை போட்டி நிகழ்ச்சி நடந்தது. கடந்த வாரம் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் வருகிற 6ந் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக கடந்த 4 மாதங்களாக குரல் தேர்வு நடந்து வந்தது. இதில் 5 முதல் 14 வரையிலான சிறுவர்கள் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது சீசன் முழுவதும் சிறுவர்களுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனிலும் பாடகி சுஜாதா, பாடகர்கள் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் நடுவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கிராமப்புற குழந்தைகளுக்கும், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் குழந்தைக்கும் முக்கியத்தும் தரப்படுகிறது.