தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜீ தமிழ் சேனல் நடத்திய சரிகமப நிகழ்ச்சியல் தொடக்கம் முதல் நட்சத்திர பாடகியாக இருந்தவர் ரமணியம்மாள். 60 வயதை கடந்த ரமணியம்மாள் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர். அவரை தேடி கண்டுபிடித்து மேடையேற்றியது ஜீ தமிழ். ரமணியம்மாள் பாட்டுக்கு தனி ரசிகர்களே உருவானார்கள். அவர் பாடத் தொடங்கினால் கைதட்டல் காதை பிளக்கும். சேனல்காரர்களும் அவரை வெளிநாட்டுக்கெல்லாம் அழைத்துச் சென்று தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ரமணியம்மாள் இறுதி சுற்றுவரை வந்தார். டைட்டில் வின்னர் அவர்தான் என்று நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரும் கணித்தார்கள். ஆனால் போட்டியின் முடிவில் கேரளாவைச் சேர்ந்த வர்ஷா டைட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. 60 வயதுக்கு மேல் நமக்கு இந்த அளவிற்கான புகழும், பணமும் கிடைத்ததே பெரிது என்று ரமணியம்மாள் கருதினாலும் அவரது ரசிர்கள் பட்டாளம் விடுவதாக இல்லை.
"நடுவர்களின் மதிப்பெண்கள், நிகழ்ச்சியின்போது நேயர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலே டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் நேயர்களின் அதிக வாக்குகளை பெற்றவர் ரமணியம்மாள் தான். அதுவரை ரமணியம்மாளுக்கு மதிப்பெண்களை அள்ளிப்போட்ட நடுவர்கள் இறுதிபோட்டியில் அவருக்கு மதிப்பெண்களை ஏன் குறைக்க வேண்டும். நிஜமாகவே வெற்றி பெற்றது ரமணியம்மாள் தான்" என்று நெட்டிசன்கள் கருத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
"வர்ஷா முறைப்படி சங்கீதம் படித்த புரபசனல் பாடகி. ஆனால் ரமணியம்மாள் எந்த சங்கீத பின்புலமும் இல்லாத சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அவரது குடும்ப சூழல், வாழ்க்கை சூழல், வயது இவற்றையும் நடுவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்" என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.