மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் டி.வி திரைப்பட தரத்துக்கு தொடர்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வந்தாள் ஸ்ரீதேவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
பொதுவான சின்னத்திரை சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வந்தாள் ஸ்ரீதேவி தொடரின் நாயகி அனன்யா சினிமாவில் இருந்து சீரியலுக்கு வந்திருக்கிறார். ஹீரோயின்களை இயற்கையான சூழுலில் ஆடவிட்டு படம்பிடிக்க சினிமா உலகம் மசினகுடிக்கு செல்லும், அந்த மசினகுடியில் இருந்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி. அப்பா ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றுகிறார்.
சென்னையில் படித்தவருக்கு அப்படியே மீடியாக்கள் பக்கம் கவனம் திரும்ப பல சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு சாருஹாசன் தாதாவாக நடிக்கும் தா தா 87 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் வந்தாள் ஸ்ரீதேவி ஆடிசனில் கலந்து கொண்டு அதிலும் தேர்வாகி இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தா தா 87 படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமா நடிகையாக புகழ்பெற வேண்டும் என்பதே அனன்யாவின் ஆசை.