நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
5 வருடத்துக்கு முன்பு மிஸ்.தமிழ்நாடு போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் வென்றவர் கனிகா. அதன்பிறகு பெண்கள் பயன்படுத்தும், ஷாம்பூ, சீயக்காய் எண்ணை விளம்பரங்களில் தலைமுடியை அலைபாய விட்டு நடித்தார். கே.பாலச்சந்தரால் சின்னத்திரைல் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். இப்போது பொம்மி வீரன் படத்தில் கவிஞர் சினேகன் தங்கையாக நடித்து வருகிறார். கனிகாவின் அடுத்த அவதாரம் எழுத்தாளர்.
கிராமத்து சமையல் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் இப்போது விற்பனையில் இருக்கிறதாம். "நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். எனக்குள் எப்போதுமே ஒரு கிராமத்து பெண் ஒழிந்திருக்கிறாள். அதனால் தான் சிலம்பம், பறையாட்டம் கற்றுக் கொண்டேன். இப்போது வில் அம்பு பயிற்சியும் எடுத்து வருகிறேன். சினிமாவில் நல்ல தரமான கிராமத்து கேரக்டர்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.
அடிப்படையில் எனக்கு நன்றாக எழுத வரும் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்தபோதுதான் என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்புகள் நினைவுக்கு வந்தது. இன்றைக்கு மக்கள் பாஸ்ட்புட்டை நோக்கிச் சென்று உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது பாரம்பரிய சமையல் கலையும் மறைந்து வருகிறது. இரண்டையும் காப்பாற்ற பாட்டியிடம் முழு தகவலும் கேட்டு எழுதப்பட்டதுதான் கிராமத்து சமையல். இப்போது அதற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்ததும் இன்னும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் கனிகா.