ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
5 வருடத்துக்கு முன்பு மிஸ்.தமிழ்நாடு போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் வென்றவர் கனிகா. அதன்பிறகு பெண்கள் பயன்படுத்தும், ஷாம்பூ, சீயக்காய் எண்ணை விளம்பரங்களில் தலைமுடியை அலைபாய விட்டு நடித்தார். கே.பாலச்சந்தரால் சின்னத்திரைல் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். இப்போது பொம்மி வீரன் படத்தில் கவிஞர் சினேகன் தங்கையாக நடித்து வருகிறார். கனிகாவின் அடுத்த அவதாரம் எழுத்தாளர்.
கிராமத்து சமையல் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் இப்போது விற்பனையில் இருக்கிறதாம். "நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். எனக்குள் எப்போதுமே ஒரு கிராமத்து பெண் ஒழிந்திருக்கிறாள். அதனால் தான் சிலம்பம், பறையாட்டம் கற்றுக் கொண்டேன். இப்போது வில் அம்பு பயிற்சியும் எடுத்து வருகிறேன். சினிமாவில் நல்ல தரமான கிராமத்து கேரக்டர்களிலேயே நடிக்க விரும்புகிறேன்.
அடிப்படையில் எனக்கு நன்றாக எழுத வரும் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்தபோதுதான் என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்புகள் நினைவுக்கு வந்தது. இன்றைக்கு மக்கள் பாஸ்ட்புட்டை நோக்கிச் சென்று உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது பாரம்பரிய சமையல் கலையும் மறைந்து வருகிறது. இரண்டையும் காப்பாற்ற பாட்டியிடம் முழு தகவலும் கேட்டு எழுதப்பட்டதுதான் கிராமத்து சமையல். இப்போது அதற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்ததும் இன்னும் ஏதாவது எழுத வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் கனிகா.