‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக இப்போதும் இருப்பவர் ராஜேஷ். கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், அதன் பிறகு தனி மரம், தை பொங்கல், நான் நானேதான், அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த 7 நாட்கள் படம் அவரை நல்ல குணசித்ர நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, தனிக்காட்டு ராஜா, மெட்டி, தாய் வீடு, ஆட்டோகிராப் உள்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். ஓட்டல் நடத்தினர். சின்னத்திரையிலும் நடித்தார். தாயம், முடிவல்ல ஆரம்பம் தொடர்களில் நடித்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரோஜா என்ற தொடரில் நடிக்கிறார். விபத்தொன்றில் மனைவியையும் மகளையும் இழந்து விட்டு அன்புக்கு தவிக்கிற தந்தையாகவும், அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளம் பெண்ணுக்கு வக்கிலாகவும் வாழ்கிற கேரக்டரில் நடிக்கிறார்.