'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக இப்போதும் இருப்பவர் ராஜேஷ். கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், அதன் பிறகு தனி மரம், தை பொங்கல், நான் நானேதான், அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த 7 நாட்கள் படம் அவரை நல்ல குணசித்ர நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, தனிக்காட்டு ராஜா, மெட்டி, தாய் வீடு, ஆட்டோகிராப் உள்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். ஓட்டல் நடத்தினர். சின்னத்திரையிலும் நடித்தார். தாயம், முடிவல்ல ஆரம்பம் தொடர்களில் நடித்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரோஜா என்ற தொடரில் நடிக்கிறார். விபத்தொன்றில் மனைவியையும் மகளையும் இழந்து விட்டு அன்புக்கு தவிக்கிற தந்தையாகவும், அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளம் பெண்ணுக்கு வக்கிலாகவும் வாழ்கிற கேரக்டரில் நடிக்கிறார்.