ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ் டி.வியில் கடல் கடந்து உத்தியோகம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. ராஜ் டிவியில் எச்டி டிஜிட்டல் தரத்தில் ஒளிபரப்பாகும் முதல் தொடர் இது. ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரிக்கிறது. லேனா மூவேந்தர் இயக்குகிறார். சுர்ஜித் அன்சாரி ஹீரோவாகவும், காயத்ரி கண்ணன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர மதுமிதா, கவுரிஜானு, ஈ.வி.எஸ் கணேஷ்பாபு, சிவலிங்க பாபு, பாலிமர் பிரதீப், பானு பரத்வாஜ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கி பெரிய இடத்துக்கு அனுப்பும் நாராயணன் முதுமையில் தனிமையில் வாழ்கிறார். இவரது மகன் தமோதரன் மனைவி பிரியாவுடன் அமெரிக்காவில் செட்டிலாகிறார். மகளோ எப்போதும் வேலை வேலை என்று பணம் சம்பாதிப்பதிலேய குறியாக இருக்கிறார். கூட்டுக் குடும்பமாக வாழ நி¬னைக்கும் நாராயணன் காணும் கனவும், அது நிறைவேறுகிறதா என்பதும்தான் கதை. தனது 60வது திருமண நாளுக்கு வரும் மகள், மகன், பேரத் பேத்திகளை பல திட்டங்களை போட்டு தன்னுடனேயை தங்க வைக்கிறார். அது எப்படி என்பதுதான் திரைக்கதை. திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.