ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக சரிகமப என்ற இசை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர், பாடகிகளுக்கு பல சுற்று போட்டிகள் நடந்தது. இளைஞர்களுடன் ரமணியம்மாள் என்ற 63 வயது பாட்டியும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீநிதி, சஞ்சய், ரமணியம்மாள், வர்ஷா, ஜாஸ்கரன் சிங் ஆகியோர் தேர்வானார்கள். 5 பேருமே போட்டி போட்டு பாடல்களை பாடினார்கள். இறுதியில் வர்ஷா டைட்டில் வென்றார்.
கேராளவைச் சேர்ந்த வர்ஷா, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவர், சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். டைட்டில் வென்றது குறித்து வர்ஷா கூறும்போது "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இந்த டைட்டில் என் பாட்டு பயணத்தின் அடுத்த கட்டத்தை துவக்கி இருக்கிறது. தொடர்ந்து பாடுவேன். சின்னத்திரையிலும் பாடுவேன். சினிமாவிலும் பாடுவேன். என்னை தேர்வு செய்த நடுவர்கள், வாக்களித்த இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.