'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப என்கிற மியூசிக் ரியாலிட்டி ஷோ மூலம் இசை உலகில் திடீர் நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர், 60 வயதை தாண்டிய ரமணியம்மாள். பழைய பாடல்களை அனாயசமாக பாடி கைதட்டல்களை அள்ளும் ரமணியம்மாளுக்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். திடீர் புகழால் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று வந்து விட்டார். வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் இப்போது கை நிறைய பணத்துடன் நடுத்தர வர்கத்துக்கு பெண்ணாகியிருக்கிறார்.
சரிகமப நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் வருகிற 14ந் தேதி நடக்கிறது. இறுதி சுற்றில் போட்டியிட ரமணியம்மாள் உள்பட 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 63 வயதாகும் ரமணியம்மாள் 20 முதல் 25 வயது வரை உள்ள ஜாஸ்கரன் சிங், சஞ்சய், ஸ்ரீநிதி, வர்ஷா ஆகிய 4 இளம் பாடகர்களுடன் மோதுகிறார்.
நடுவர்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ரசிகர்களின் ஓட்டு ரமணியம்மாளுக்குத்தான் கிடைக்கும் அதனால் அவர் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். பரிசை வென்று சினிமா பாடகி ஆக வேண்டும் என்பதே ரமணியம்மாளின் லட்சியம். அதற்காக தீவிர பயிற்சியில் இருக்கிறார். அவர் வெற்றிபெற வாழ்த்துவோம்.