இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை தேவதர்ஷினி தற்போது சினிமாவிலும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காஞ்சனா 3ம் பாகத்தில் நடித்து வருபவர், தான் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்த சேனலில் இருந்து விலகி, தற்போது ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். இடையிடையே சினிமாவிலும் நடிக்கிறார்.
இதற்கு முன்பு அவர் முன்னணி சேனலில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஒவ்வொரு வாரமும் புதிய கான்செப்ட்டுகள், நாட்டு நடப்புகளை கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. 6 ஆண்டுகள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவை குறைந்து விட்டதாக சேனல் நிர்வாகம் கருதியதாக தெரிகிறது. இதனால் தேவதர்ஷினி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட வெரைட்டியாக நிகழ்ச்சி பண்ணலாம் என்று முடிவெடுத்து தான் சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகியதாக தேவதர்ஷினி தரப்பு தெரிவிக்கிறது.