தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொறியாளருக்கு படித்து விட்டு தொகுப்பாளினி ஆனவர் சுவதிஷ்டா. சென்னை பொண்ணு. பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவர் திடீரென்று சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தன்னை பேட்டி எடுத்தவரை அப்படியே சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் மிஷ்கின்.
சவரக்கத்தி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கிறார். அடுத்து ஜீவாவுடன் கீ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மதம் என்ற படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களின் வருகைக்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் ஆபாயில் என்ற வெப் சீரியலில் நடித்து அதிலும் பாப்புலராகி விட்டார். இனி தொகுப்பாளினி வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு சினிமாவிலும், வெப் சீரியல்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சுவதிஷ்டா.