ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் தொலைக்காட்சியில் நீலி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அன்பான கணவன், அழகான மனைவி, ஆசைக்கு ஒரு மகள் என அழகாக செல்லும் ஒரு குடும்பம். ஒரு நாள், மனைவி ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். அப்பா வேலையே பிசியாக இருக்கிறார். தனித்துவிடப்பட்ட மகளுக்கு துணையாக இருப்பது நீலி என்கிற பொம்மை. அந்த பொம்மைக்குள் புகுந்து கொள்கிறது குழந்தையின் அம்மா ஆவி. அந்த பொம்மைக்குள் இருந்து கொண்டே குழந்தையை கவனித்துக் கொள்வதோடு. தன் சாவில் உள்ள மர்மங்களையும் குழந்தையை கொண்டே வெளிப்படுத்துகிற மாதிரியான திகில் கதை.
தாய்க்கும் மகளுக்குமான ஆழமான அன்புதான் கதையின் பிரதானம். வருகிற டிசம்பர் 12ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.