ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குற்றம் நடந்தது என்ன? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் புலனாய்வு நிகழ்ச்சி. இதை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது இதே நிகழ்ச்சி நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற பெயரில் இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த 29ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சமீப காலமாக உளவியல் ரீதியான குற்றங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான கொலைகள், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான கொலைகள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள். இந்த குற்றங்களின் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
"இந்த நிகழ்ச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட உண்மை சம்பவங்களின் புலன் விசாரணைகளை அடிப்படையாக கொண்டது. இந்த நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு தீர்வும் அறிவிக்கப்படவில்லை. மற்றும் இந்த நிகழ்ச்சியின் எந்த ஒரு பகுதியையும், காட்சியையும் ஆதாரமாக பயன்படுத்தினால் அதற்கு விஜய் டி.வி பொறுப்பேற்காது. நிகழ்ச்சியின் உள்ளடக்கம், மற்றும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு விஜய் டி.வி பொறுப்பு" என்று சேனல் அறிவித்துள்ளது.