ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மக்கள் டிவியில் சொல் விளையாட்டு உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆர்த்தி. தனது அழகான தமிழ் பேச்சு மூலம் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை கவர்ந்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரு மணம் செய்து கொண்டார். அதையடுத்து சின்னத்திரையில் அவரை காண முடியவில்லை.
ஆனால் தற்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் பிரவேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதன் முன்னோட்டமாக சில விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்து வரும் ஆர்த்தி, ஏற்கனவே தான் பங்களித்து வந்த சேனல்களில் தனக்கான இடத்தை புதிய ஆங்கர்கள் கைப்பற்றி விட்டதால் தற்போது சில புதிய சேனல்களில் தொகுப்பாளினியாக பங்கேற்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
மேலும், இந்த நேரத்தில் அவரை சிலர் சீரியல்களில் நடிக்கக் கேட்டபோது அதற்கு மறுத்து விட்டாராம் ஆர்த்தி. சினிமா, சீரியல்களில் நடிக்கும் ஐடியா எதுவும் இல்லை. தற்போது எனக்கு 6 மாத குழந்தை இருப்பதால் அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. அதனால், எப்போதும் போலவே தொகுப்பாளினியாக மட்டுமே சேனல்களில் இடம்பெற விரும்புகிறேன் என்கிறார் ஆர்த்தி.