'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலங்கள், சின்ன பாப்பா பெரிய பாப்பா, பொறந்த வீடா புகுந்த வீடா, பொண்டாட்டி தேவை, மாமா மாப்ளே உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நளினி. தற்போது என் இனிய தோழியே, மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். அதோடு, அம்மா நான் கொடல என்றொரு தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி தான் நடித்துள்ள சீரியல்களில் பெரும்பாலும் செண்டிமென்ட், காமெடி வேடங்களாக நடித்திருக்கிறார் நளினி.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து விட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். சினிமாவில் கதாநாயகியாக நடித்ததால் பெரும்பாலும் காதல் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களாகத்தான் நடித்தேன். ஆனால் சீரியலுக்கு வந்த பிறகு குணசித்ர நடிகையாகி விட்டேன். அம்மா வேடம், காமெடி வேடம், வில்லி வேடம் என்று கலந்து நடித்து வருகிறேன். இதில் எனக்கு செண்டிமென்ட்டாக நடித்த வேடங்களை விட காமெடியாக நடித்த வேடங்கள்தான் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. அதனால்தான் டைரக்டர்கள் என்னை காமெடி சீரியல்களில் நடிக்க அழைக்கிறார்கள்.
அதோடு, எனக்கும், ஓவராக அழுது நடிப்பது பிடிக்காது. அதனால் சில சீரியல்களைகூட தவிர்த்திருக்கிறேன். அதேசமயம், காமெடி என்றால் குஷியாகி விடுவேன். அதிக ஈடுபாடு காட்டி நடிப்பேன். அதோடு சொர்ணாக்கா ரேஞ்சுக்கு சில அதிரடியான கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அந்த மாதிரி வேடங்கள் வில்லியாக தெரிந்தாலும் அதில் காமெடியும் கலந்திருக்கும். அந்தவகையில், சமீபகாலமாக சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே காமெடி கலந்த வேடங்களில் அதிகமாக நடிப்பது எனக்கு திருப்தியாக உள்ளது என்கிறார் நளினி.