பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பிய வேலன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்போது அதே சரிகம நிறுவனம் தயாரிக்கும் வள்ளி தொடரில் நடிக்க வந்திருக்கிறார். மர்மமான பின்னணி கொண்ட டெரர் பாட்டியாக நடிக்கிறார்.
"நடிப்பை விட்டு நான் எப்போதுமே விலகியதில்லை. சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. அதனால் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். வள்ளியில் நல்ல கேரக்டர் கிடைத்தது. சரிகம முக்கியமான நல்ல நிறுவனம் அதுதான் மீண்டும் வந்துவிட்டேன். மக்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். அதை விட முடியுமா" என்கிறார் ஜோதிலட்சுமி.