'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
ஒருகாலத்தில் தனது கவர்ச்சி ஆட்டத்தால் கலக்கியவர் ஜோதிலட்சுமி. 300 படங்களுக்கு மேல் ஆடியுள்ளார். 50 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்துள்ளார். வயதாகிவிட்டதால் ஆடுவதை குறைத்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
பல வருடங்களுக்கு முன்பு சரிகம நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பிய வேலன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இப்போது அதே சரிகம நிறுவனம் தயாரிக்கும் வள்ளி தொடரில் நடிக்க வந்திருக்கிறார். மர்மமான பின்னணி கொண்ட டெரர் பாட்டியாக நடிக்கிறார்.
"நடிப்பை விட்டு நான் எப்போதுமே விலகியதில்லை. சில நாள் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றியது. அதனால் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். வள்ளியில் நல்ல கேரக்டர் கிடைத்தது. சரிகம முக்கியமான நல்ல நிறுவனம் அதுதான் மீண்டும் வந்துவிட்டேன். மக்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் உண்மையான சந்தோஷம். அதை விட முடியுமா" என்கிறார் ஜோதிலட்சுமி.